Friday, March 20, 2020

Manavalakkali- What is in Tamil

மனத்தை வளப்படுத்தும் கலை மனவளக்கலையாகும். இதில் நான்கு அங்கங்கள் உள்ளன. 1. அகத்தவம். 2. அகத்தாய்வு 3. குணநலப்பேறு 4. முழுமைப்பேறு . நான்கிற்கும் மனமே விளைநிலம்.
மனம் தன திறமையும், வல்லமையையும் பெருக்கிக் கொள்ளும் பயிற்சியே தவம். ஆக்கினை, துரியம், துரியாதீதம் முதலியவை செய்து மனவலிமையைப் பெருக்கிக் கொள்ள முடியும்.
மனம் தன்னைத் தூய்மை செய்து கொள்ள எடுத்துக் கொள்ளும் முயற்சியே அகத்தாய்வு ஆகும். எண்ணம் ஆராய்தல்,ஆசை சீரமைத்தல், சினம் தவிர்த்தல், கவலை ஒழித்தல், நான் யார் என்ற பயிற்சிகள் மூலம் அகத்தை ஆய்வு செய்து கொள்ள முடியும்.
மனம் தன்னைத் தூய்மை செய்து கொள்ள எடுத்துக் கொள்ளும் முயற்சியே அகத்தாய்வு. ஆறு தீய குணங்களைச் சீரமைத்து, நற்குனங்களாக மாற்றி அடைவதே குணநலப்பேறாகும்.
தூய்மையில் பூரணத்தை அடைந்து அமைதியாக வாழ்வதே முழுமைப்பேறு.மனத்தூய்மையும், வினைத்தூய்மையும் பெற்று களங்கங்கள் முழுவதும் நீக்கி இத்தகைய நற்குணங்களில் சிறந்து ஓங்கி, இறைநிலையோடு ஒன்றி வாழ்வதே முழுமைப்பேறு.
"மனம் தன் திறமையையும் வல்லமையையும்
பெருக்கிக் கொள்ளும் பயிற்சியே 'தவம்".
"பழக்கத்திற்கும், விளக்கத்திற்கும் இடையே போராடிக்
கொண்டிருக்கக் கூடிய மனதின் பழக்கத்தை முறையாக
மாற்றிக் கொண்டு விளக்கத்தை நல் விளக்கமாக பெற்று
அதன் வழியே வாழ்க்கையை அமைத்துக் கொள்ள உள்ள
முறையான பயிற்சியே மனவளக்கலை"
மனிதவுயிர் பிறவியதன் மதிப்புணர வேண்டும்
மனம் உயிர்மெய்மூன்றான மறைபொருட்களான
மனிதனுடைய ஆற்றல்களை மலரவைக்க வேண்டும்
மறைந்திருக்கும் உட்பதிவாம் பலவினைகடம்மை
மனிதனேமாற்றி அறச்செயல் பதிவு செய்து
மனத்தூய்மை வினைத்தூய்மை பெற்று பரத்துரைந்து
மனிதனவன் உயர்மனிதனாக வாழச்செய்யும்
மனவளகலையிதனைப் பரப்பி நலம் காண்போம்

Friday, January 31, 2020

CANCER TREATMENT INDIA

பைரவ அதிசயம்
தீராத கேன்சர் நோயா கவலை வேண்டாம்....
9842599006
முக்கியமான செய்தி - கட்டாயம் பகிருங்கள். தேவையுள்ள
ஒருவருக்கு இது உதவக்கூடும்.
புற்றுநோய்க்கு மருந்து இல்லை என்ற கவலை வேண்டாம்,
எல்லா விதமான புற்றுநோய்க்கும் எந்த நிலையில் இருந்தாலும் பூரணமாக குணப்படுத்தக்கூடிய ஆயுர்வேத மருந்து வழங்கப்படும்.
ஈரோடு, அவல்பூந்துறையில், மஹா பைரவ அவதார்
ஸ்ரீ விஜய் சுவாமிஜியிடம் இம் மருந்தை பெறலாம்.
சுமார் பல ஆண்டுகளாக பல்லாயிரம் புற்றுநோயாளிகளை
குணப்படுத்தியிருக்கிறார்.
இது யாராவது ஒருவருக்கு உதவக்கூடும்.எனவே உங்கள்
உறவினர் மற்றும் நண்பர்களிடம் SHARE செய்யவும்.
மேலும் விவரங்களுக்கு அணுகவும்.
பைரவா பீடம்,
அவல் பூந்துறை,
ஈரோடு-638115
தமிழ்நாடு,
இந்தியா.
அழைப்பிற்கு: 9842599006,, 9655199006.
மின் அஞ்சல் முகவரி : www.bairavafoundation.org. bairavafoundation@gmail.com.
#cancer #கேன்சர்
#vijaaiswamiji #bairavafoundation #bairavapeedam

Tuesday, January 28, 2020

Thoppukranam - In Tamil -Super Yoga

ஒரு காலத்தில் தோப்புக்கரணம் போடுவது என்பது பள்ளிகளில் மிகச் சாதாரணமான விஷயம். தவறு செய்தாலோ, வீட்டுப்பாடம் எழுதி வரா விட்டாலோ ஆசிரியர்கள் மாணவர்களைத் தோப்புக்கரணம் போட வைப்பது வாடிக்கை. பரிட்சை சமயத்தில் பக்தி அதிகரித்து மாணவர்கள் அதிக மதிப்பெண் பெற தாங்களாகவே பிள்ளையார் முன் தோப்புக்கரணம் போடுவதுமுண்டு. ஆனால் இக்காலத்தில் தோப்புக்கரணம் போடுவதை அதிகமாக நாம் காண முடிவதில்லை.
ஆனால் இந்த தோப்புக்கரணம் அமெரிக்காவில் ஆராய்ச்சிக்கு எடுத்துக் கொள்ளப்பட்டுள்ளது என்று சொன்னால் ஆச்சரியமாக இருக்கிறதல்லவா? லாஸ் ஏஞ்சல்ஸைச் சேர்ந்த மருத்துவர் எரிக் ராபின்ஸ் (Dr.Eric Robins) இந்த எளிய உடற்பயிற்சியால் மூளையின் செல்களும் நியூரான்களும் சக்தி பெறுகின்றன என்கிறார். அவர் தன்னிடம் வரும் நோயாளிகளுக்கு அந்த உடற்பயிற்சியை சிபாரிசு செய்வதாகக் கூறுகிறார். பரிட்சைகளில் மிகக் குறைந்த மதிப்பெண்கள் எடுக்கும் ஒரு பள்ளி மாணவன் தோப்புக்கரண உடற்பயிற்சியைச் சில நாட்கள் தொடர்ந்து செய்த பின் மிக நல்ல மதிப்பெண்கள் வாங்க ஆரம்பித்ததாகக் கூறுகிறார்.
யேல் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த நரம்பியல் நிபுணரான டாக்டர் யூஜினியஸ் அங் (Dr. Eugenius Ang) என்பவர் காதுகளைப் பிடித்துக் கொள்வது மிக முக்கிய அக்குபஞ்சர் புள்ளிகளைத் தூண்டி விடுகின்றன என்று சொல்கிறார். அதனால் மூளையின் நரம்பு மண்டல வழிகளிலும் சக்தி வாய்ந்த மாற்றங்கள் ஏற்படுவதாக அவர் தெரிவிக்கிறார். இடது கையால் வலது காதையும், வலது கையால் இடது காதையும் பிடித்துக் கொண்டு உட்கார்ந்து எழுகையில் மூளையின் இரு பகுதிகளும் பலனடைகின்றன என்று சொல்கிறார்.
தோப்புக்கரணம் போடுவதால் ஏற்படும் மாற்றங்களை EEG கருவியால் டாக்டர் யூஜினியஸ் அங் அளந்து காண்பித்தார். மூளையில் நியூரான்கள் செயல்பாடுகள் அதிகரிப்பதை பரிசோதனையில் காண்பித்த அவர் மூளையின் வலது, இடது பாகங்கள் சமமான சக்திகளை அடைவதாகவும் சொன்னார். மிக நுண்ணிய தகவல் அனுப்பும் காரணிகள் வலுப்பெறுவதும் பரிசோதனையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. டாக்டர் யூஜினியஸ் அங் தானும் தினமும் தோப்புக்கரணம் போடுவதாகக் குறிப்பிடுகிறார்.
Autism, Alzheimer போன்ற இக்காலத்தில் அதிகரித்து வரும் நோய்களுக்குக் கூட இந்த தோப்புக்கரண உடற்பயிற்சியை ஆராய்ச்சியாளர்கள் பரிந்துரைக்கிறார்கள். தோப்புக்கரணம் தினமும் செய்வதன் மூலம் மேற்கண்ட நோய்களால் பாதிக்கப்பட்ட குழந்தைகள் மிக நல்ல பலன்களைப் பெறுவதாக அவர்களது பரிசோதனைகள் சொல்கின்றன.
ப்ராணிக் சிகிச்சை நிபுணர் கோ சோக் சூயி (Master Koa Chok Sui) தன்னுடைய Super Brain Yoga என்ற புத்தகத்தில் தோப்புக்கரணத்தைப் பற்றியும் அதன் பலன்கள் பற்றியும் குறிப்பிட்டுள்ளார். தன்னுடைய சொற்பொழிவுகளிலும் இதை அதிகம் குறிப்பிடுகிறார்.
இதனால் தான் தோப்புக்கரணம் பள்ளிகளில் நம் முன்னோர்களால் நடைமுறைப்படுத்தப்பட்டு இருக்கலாம் என்று தோன்றுகிறது. படிக்காத மாணவர்கள் தோப்புக்கரண முறையால் தண்டிக்கப்படுவதன் மூலம் அவர்களது அறிவுத் திறன் அதிகரிக்க வழியும் காண்பிக்கப்பட்டிருக்கிறது என்று தோன்றுகிறது.
இந்த தோப்புக்கரணப்பயிற்சியை தினந்தோறும் மூன்று நிமிடங்கள் செய்தால் போதும் வியக்கத் தக்க அறிவு சார்ந்த மாற்றங்களைக் காணலாம் என்று ஆராய்ச்சியாளர்கள் கருதுகிறார்கள். அவர்கள் பரிந்துரைக்கும் தோப்புக்கரண பயிற்சியை அவர்கள் சொல்கின்ற முறையிலேயே காண்போமா?
உங்கள் கால்களை உங்கள் தோள்களின் அகலத்திற்கு அகட்டி வைத்து நின்று கொள்ளுங்கள். உங்கள் பாதங்கள் நேராக இருக்கட்டும். வலது காதை இடது கையின் பெருவிரலாலும் ஆட்காட்டி விரலாலும் பிடித்துக் கொள்ளுங்கள். அதே போல் இடது காதை வலது கையின் பெருவிரலாலும் ஆட்காட்டி விரலாலும் பிடித்துக் கொள்ளுங்கள். பிடித்துக் கொள்ளும் போது இடது கை உட்புறமாகவும், வலது கை வெளிப்புறமாகவும் இருக்க வேண்டும் என்பது முக்கியம்.
மூச்சை நன்றாக வெளியே விட்டபடி அப்படியே உட்கார்ந்து மூச்சை உள்ளே நன்றாக இழுத்தபடி எழுந்து நில்லுங்கள். மூச்சும், உட்கார்ந்து எழுவதும் ஒரு தாளலயத்துடன் இருக்கட்டும்.
செய்து பழக்கமில்லாதவர்களுக்கு ஆரம்பத்திலேயே மூன்று நிமிடங்கள் தொடர்ந்து தோப்புக்கரணம் செய்வது கடினமாக இருக்கலாம். அப்படிப்பட்டவர்கள் ஒரு நிமிடம் செய்வதில் இருந்து ஆரம்பித்து நாட்கள் செல்லச் செல்ல இரண்டு நிமிடங்கள், பிறகு மூன்று நிமிடங்கள் என்று அதிகரியுங்கள். ஓம்
ஆராய்ச்சியாளர்கள் சொல்லும் மிக நல்ல பலன்களைப் பார்க்கும் போது உங்கள் அறிவுத் திறனின் வளர்ச்சிக்காக மூன்று நிமிடங்கள் தினமும் செலவழிப்பது மிகப்பெரிய விஷயமல்ல அல்லவா?

SARVA VASYA SANKALPAM -TAMIL

SARVA VASYA SANKALPAM -TAMIL

Monday, January 27, 2020

Kayakalpm -Tamil - Explanation

காயகற்பப் பயிற்சி எனும் ஒரு அற்புதமான மனித வளப் பயிற்சி அளிக்கப்படுகிறது. விந்து நாதம் எனும் மூலப்பொருட்களைத் தூய்மை செய்து அவற்றின் வலுவையும் அளவையும். தரத்தையும் உயர்த்தும் எளிய பயிற்சி ஆகும் அது. நாம் உண்ணும் உணவு. 1. ரசம் 2. ரத்தம் 3. சதை 4. கொழுப்பு 5. எலும்பு 5. மஜ்ஜை மற்றும் 6. சுக்கிலம் என்ற ஏழு தாதுக்களாக முறையே ஒன்றிலிருந்து மற்றொன்றாக இறையாற்றலால் மாற்றப்படுகின்றன. இந்த உடலியக்க விஞ்ஞானத்தைப் பற்றி சிந்தனையாளர்களுக்கும் மருத்துவ விஞ்ஞானிகட்கும் நன்கு தெரியும். இவற்றில் சுக்கிலம் (விந்து-நாதம்) எனும் 'சீவ இன அனைத்தடக்கப் பொருள்' தான் மனித உடலினது தோற்றம் தன்மை வளர்ச்சி இயக்கம் விளைவுகள் அனைத்துக்கும் அடிப்படை ஆற்றலான மிக மதிப்புடைய பொருளாகும். உயிரினங்களின் பிறப்பு இறப்பு இரண்டு நிகழ்ச்சிகட்கும் வித்து எனும் சீவசக்தியே காரணம் ஆகும். ஒரு விதையில் ஒரு முழு மரம் காந்த அலைவடிவில் சுருங்கி இருப்பதைப் போலவே விந்துநாதக் குழம்பில் உள்ள ஒவ்வொரு செல்லிலும் மனித வடிவமே சுருங்கி இருக்கிறது. மேலும் பரிணாமத் தொடராக வரும் செயல்கள் எண்ணம் இவற்றின் அலைகளைச் சுருக்கிப் பதிவாக வைத்திருக்கும் கருமையத்ததைத் தாங்கிக் கொண்டு இருக்கும் தெய்வீகத் திரவமும் வித்துவே (Sexual vital fluid) விந்து நாதத் திரவமே ஆகும். இத்தகைய மதிப்பு வாய்ந்த வாழ்க்கை நலநிதியான விந்துநாதத் திரவங்களை மனிதவள மதிப்பறியாமல் மக்களில் பெரும்பாலோர் வீணாக்கியும் கெடுத்தும் விடுகிறார்கள். இந்தக் குறைபாடு மனித வளத்தை மிகவும் தாக்கிச் சீரழிக்கின்றது. இதனால் தான் தனிமனிதன் குடும்பம் சமுதாயம் உலகம் என்ற அளவில் மனித இன வாழ்வில் கணிக்க முடியாத எண்ணிக்கையில் சிக்கல்களையும் துன்பங்களையும் விளைவிக்கின்றன. இந்த உண்மைகளை அறிந்த சித்தர்கள் எனும் மனிதவள விஞ்ஞானிகள் வித்துவைத் தூய்மை செய்து வளப்படுத்தும் பயிற்சியை உலக மக்களுக்கு வழங்கியுள்ளார்கள். இந்தப் பயிற்சி தான் காயகற்பம் எனும் மனித வளப் பயிற்சியாகும். நீண்ட காலமாக இந்தக் காயகற்ப பயிற்சியானது மிகவும் ரகசியமாக வைக்கப்பட்டிருந்தது. எல்லாச் சித்தர்களுமே அவரவர்கள் எழுதிய நூல்களில் இந்தப் பயிற்சியைப் பற்றிச் சில குறிப்புகளை எழுதி உள்ளார்கள். எனினும் இதனைப் பயின்று பயன் பெற்றவர்கள் நேர்முகமாகக் கற்றுக் கொடுத்தால் அல்லாது எவருக்கும் எழுத்தின் மூலம் இந்தப் பயிற்சியினை விளங்கிக் கொள்ளமுடியாது. உதாரணமாக உருத்தரித்த நாடியில் ஒடுங்குகின்ற வாயுவைக் கருத்தினா லிருந்தியே கபாலமேற்ற வல்லீரேல் விருத்தரும் பாலராவார். மேனியும் சிவந்திடும் அருள்தரித்த அம்மைபாதம் ஐயன்பாதம் உண்மையே! காயகற்ப பயிற்சியைப் பற்றி சித்தர்கள் எழுதி உள்ள பாடல்களில் இது ஒன்று. இது சுத்த தமிழ்தான் என்றாலும் இதனைப் படித்து விட்டுக் காயகற்பப் பயிற்சியை ஒருவர் தெரிந்து பழகமுடியாது. எனவே குரு என்னும் ஒரு நபரிடமிருந்து நேர்முறைப் பயிற்சி தான் தேவையாகின்றது. இந்தப் பயிற்சியை மூன்று மணி நேரத்தில் ஒருவர் கற்றுக் கொள்ள முடியும். மனவளக் கலை மன்றங்களில் உறுப்பினராகி வாழ்க்கைவள விஞ்ஞானம் பயில்வேலார்களுக்கு இந்தப் பயிற்சியும் சேர்த்துக் கொடுக்கப்படுகின்றது. முறை தவறிய வழிகளில் விந்துவை நாசப்படுத்தி கொண்டு படிப்பில் விருப்பமில்லாமலும் நினைவாற்றல் குறைந்து வாழ்வில் சோர்வும் ஏமாற்றமும் காண்கின்ற இளைஞர்களுக்கு அவர்கள் வாழ்வைப் புதுப்பித்துக் கொள்ள இது ஒர் உயர்ந்த சாதனைவழி. ஆண் பெண் இருபாலரும் வயது பதினான்கு பதினைந்துக்கு மேல் காயகற்பப் பயிற்சியைக் கற்றுப் பயனடையலாம். திருமணம் வேண்டாம் என்று பொதுநல ஆன்மீகத் தொண்டில் ஈடுபட்டுள்ளவர்களுக்கும் இந்த அரிய காயகற்பக் கலை நல்லதோர் தோழனாகப் பயன்படும். 1. ஆயகலை கள்மொத்தம் கணக்கெடுத்தோர் அறுபத்தி நாலுஎன்றார் அனைத்தும் கற்றும் காயகற்ப மெனும்கலையைக் கற்கா விட்டால் கற்றதெல்லாம் மண்புக்கும் உடல்வி ழுந்தால் மாயமெனும் காந்தம்உயிர் வித்து மூன்றில் மறைந்துள்ள இரகசியங்கள் விளங்கி வாழ்ந்தால் தீயவினை கள்கழிய உலகுக் கென்றும் தெளிவான அருள்ஒளியாய் நிலைக்கும் ஆன்மா 2. கறைபோக்கி வித்ததனை உறையச் செய்யும். காயகற்பப் பயிற்சியினால் உளநோய் நீங்கும் நிறைமனமும் ஈகையோடு பொறுமை கற்பு நேர்நிறையும் மன்னிப்பும் இயல்பாய் ஓங்கும் இறையுணர்வு விழிப்புநிலை அறிவுக் கூர்மை இனியசொல் எண்ணத்தின் உறுதி மேன்மை மறைபொருளாம் மனம் உயிர் மெய் யுணர்வு கிட்டும். மாதவமாய்ப் பிறப்பிறப்புத் தொடர் அறுக்கும்! காயகல்பம் உள்ளிட்ட உடல்பயிற்சிகளை நாள்தோறும் ஒழுங்காகச் செய்துவந்தால் நோயின்றி வாழலாம். உடலில் உள்ள செல்கள் அனைத்திலும் உள்ள துருவ அமைப்பு சீராகும். மரபு வழியாக வந்த நோய்களைக் கூட சில மாதங்களில் போக்கி நலமடையலாம். சுருங்கச் சொன்னால் மனிதகுல வாழ்வில் உள்ள அனைத்துக் குழப்பங்களுக்கும் நீங்கி அமைதியும் நிறைவும் கொண்ட வாழ்வு அமையும். காயகற்பப் பயிற்சி பயன்கள் உடல் நலம் சீரடையும்; ஆஸ்த்மா, சர்க்கரைவியாதி, குடல்புண், மூலம் போன்ற வியாதிகள் படிப்படியாக நீங்கும் / மட்டுப்படும். உடலின் நோய் எதிர்ப்புச் சக்தி பெருகும். முதுமையைத் தள்ளிப்போடவும், முதுமையிலும் இளமை காத்து இனிய வாழ்வு வாழவும் வழி கோலும். பயனுள்ள நீள் ஆயுள் வாழ ஏதுவாகும். மாணவர்ப் பருவத்தில் நினைவுக் கூர்மை, ஓழுக்கம், கடமையுணர்வு ஒங்கும். தம்பதியரிடையே இணக்கமான இனிய உறவு அமையும். மனித வாழ்வில் ஆன்மீக உணர்வு மேலோங்கி வளர உதவும். இப்பயிற்சியை 14 வயதிற்கு மேல் ஆண் / பெண் இரு பாலரும் (எல்லா மதத்தினரும்) கற்று இன்புறலாம்.

Friday, December 13, 2019

ரத்த சொந்தத்தில் திருமணம்

ரத்த சொந்தத்தில் திருமணம் செய்து கொள்வதால் ஏற்படும் சிக்கல்கள் குறித்து, மகளிர் மற்றும் மகப்பேறு டாக்டர் இந்திரா நெடுமாறன்: நம் உருவம், நிறம், பாத அமைப்பு, இதயத் துடிப்பு, நகம் வளர்ச்சி உட்பட, நம் உடலை, 'குரோமோசோம்'கள் தான் முடிவு செய்கின்றன. எப்போது இறப்போம் என்பதையும், இவை தான் தீர்மானிக்கின்றன.நம் உடல், 'செல்'களால் ஆனது. அந்த செல்களின், 'நியூக்கிளியஸ்' உள்ளே இருக்கிறது, குரோமோசோம். மனிதர்கள் ஒவ்வொருவருக்கும், 46 குரோமோசோம்கள் இருக்கும். 23 குரோமோசோம்கள் அப்பாவிடம் இருந்தும், 23 குரோமோசோம்கள் அம்மாவிடம் இருந்தும் வருகின்றன.அதனால் தான், உருவ அமைப்பு, பழக்க வழக்கங்களில் பெற்றோர் போலவே, குழந்தைகளும் உள்ளனர். அது போலத் தான், பெற்றோர் உடல் நலப் பிரச்னைகளும் குழந்தைகளுக்கு வருகின்றன. ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் இடையே, ஒரே மாதிரியான குரோமோசோம்கள் இருக்கும் என்பதால், அத்தகையோருக்கு பிறக்கும் குழந்தைகள், மாற்றுத் திறனாளிகளாக பிறக்க வாய்ப்பு அதிகம். அதே நேரத்தில், நெருங்கிய சொந்தம் இன்றி, வெளியே இருந்து திருமணம் செய்வதால், புது வகையான குரோமோசோம்கள் இருக்கும்; குழந்தைகள், மாற்றுத் திறனாளிகளாக பிறப்பதற்கான வாய்ப்பு குறைவு.தலைமுறை தலைமுறையாக சொந்தத்திலேயே திருமணம் செய்யும் போது, 'ஹீமோபீலியா, தாலசீமியா' போன்ற ரத்தம் சம்பந்தப்பட்ட பிரச்னைகள் வரும். அடிபட்டு ரத்தம் வெளியாகும் போது, மூன்று நிமிடத்தில் ரத்தம் உறைய வேண்டும். சொந்தத்தில் திருமணம் செய்தால், ரத்தம் உறையும் தன்மையில் பிரச்னை ஏற்பட வாய்ப்பு உள்ளது.மேலும், சொந்தத்தில் திருமணம் செய்யும் போது, ஒரே மாதிரியான மரபணுக்கள் தான் இருவருக்கும் இருக்கும். அதனால், மரபணு பிரச்னைகளும் ஏற்பட வாய்ப்பு உள்ளது. சர்க்கரை நோய், புற்று நோய், இதய நோய் போன்றவை, இப்படித் தான் வழி வழியாக வருகின்றன. கண் பார்வை குறைபாடு, தசை நார்கள் பிரச்னை, உயர வளர்ச்சி குறைபாடு, பருவம் அடையாமல் இருப்பது, திருநங்கையாக பிறப்பது எல்லாமே, குரோமோசோம் பிரச்னை தான். அதுபோல, சொந்தத்தில் திருமணம் செய்வதால், 'இன்பார்ன் எரர் மெட்டபாலிசம்' பிரச்னை வர வாய்ப்பு உள்ளது. இந்த பாதிப்புக்கு உள்ளான குழந்தைகளால், தாய்ப்பாலைக் கூட குடிக்க முடியாத பிரச்னை ஏற்படும். எனவே, அத்தை மகள் - மாமன் மகன் திருமணம் செய்யக் கூடாது. அதே நேரத்தில், சொந்தத்தில் திருமணம் செய்தாலும், சிலருக்கு பிரச்னை இல்லாமல், நல்ல குழந்தைகளாக பிறக்கவும் வாய்ப்பு உள்ளது. அதற்கு காரணம், மரபணுக்களில் குறைபாடு இல்லாமல் இருப்பது தான்!