Tuesday, January 28, 2020

Thoppukranam - In Tamil -Super Yoga

ஒரு காலத்தில் தோப்புக்கரணம் போடுவது என்பது பள்ளிகளில் மிகச் சாதாரணமான விஷயம். தவறு செய்தாலோ, வீட்டுப்பாடம் எழுதி வரா விட்டாலோ ஆசிரியர்கள் மாணவர்களைத் தோப்புக்கரணம் போட வைப்பது வாடிக்கை. பரிட்சை சமயத்தில் பக்தி அதிகரித்து மாணவர்கள் அதிக மதிப்பெண் பெற தாங்களாகவே பிள்ளையார் முன் தோப்புக்கரணம் போடுவதுமுண்டு. ஆனால் இக்காலத்தில் தோப்புக்கரணம் போடுவதை அதிகமாக நாம் காண முடிவதில்லை.
ஆனால் இந்த தோப்புக்கரணம் அமெரிக்காவில் ஆராய்ச்சிக்கு எடுத்துக் கொள்ளப்பட்டுள்ளது என்று சொன்னால் ஆச்சரியமாக இருக்கிறதல்லவா? லாஸ் ஏஞ்சல்ஸைச் சேர்ந்த மருத்துவர் எரிக் ராபின்ஸ் (Dr.Eric Robins) இந்த எளிய உடற்பயிற்சியால் மூளையின் செல்களும் நியூரான்களும் சக்தி பெறுகின்றன என்கிறார். அவர் தன்னிடம் வரும் நோயாளிகளுக்கு அந்த உடற்பயிற்சியை சிபாரிசு செய்வதாகக் கூறுகிறார். பரிட்சைகளில் மிகக் குறைந்த மதிப்பெண்கள் எடுக்கும் ஒரு பள்ளி மாணவன் தோப்புக்கரண உடற்பயிற்சியைச் சில நாட்கள் தொடர்ந்து செய்த பின் மிக நல்ல மதிப்பெண்கள் வாங்க ஆரம்பித்ததாகக் கூறுகிறார்.
யேல் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த நரம்பியல் நிபுணரான டாக்டர் யூஜினியஸ் அங் (Dr. Eugenius Ang) என்பவர் காதுகளைப் பிடித்துக் கொள்வது மிக முக்கிய அக்குபஞ்சர் புள்ளிகளைத் தூண்டி விடுகின்றன என்று சொல்கிறார். அதனால் மூளையின் நரம்பு மண்டல வழிகளிலும் சக்தி வாய்ந்த மாற்றங்கள் ஏற்படுவதாக அவர் தெரிவிக்கிறார். இடது கையால் வலது காதையும், வலது கையால் இடது காதையும் பிடித்துக் கொண்டு உட்கார்ந்து எழுகையில் மூளையின் இரு பகுதிகளும் பலனடைகின்றன என்று சொல்கிறார்.
தோப்புக்கரணம் போடுவதால் ஏற்படும் மாற்றங்களை EEG கருவியால் டாக்டர் யூஜினியஸ் அங் அளந்து காண்பித்தார். மூளையில் நியூரான்கள் செயல்பாடுகள் அதிகரிப்பதை பரிசோதனையில் காண்பித்த அவர் மூளையின் வலது, இடது பாகங்கள் சமமான சக்திகளை அடைவதாகவும் சொன்னார். மிக நுண்ணிய தகவல் அனுப்பும் காரணிகள் வலுப்பெறுவதும் பரிசோதனையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. டாக்டர் யூஜினியஸ் அங் தானும் தினமும் தோப்புக்கரணம் போடுவதாகக் குறிப்பிடுகிறார்.
Autism, Alzheimer போன்ற இக்காலத்தில் அதிகரித்து வரும் நோய்களுக்குக் கூட இந்த தோப்புக்கரண உடற்பயிற்சியை ஆராய்ச்சியாளர்கள் பரிந்துரைக்கிறார்கள். தோப்புக்கரணம் தினமும் செய்வதன் மூலம் மேற்கண்ட நோய்களால் பாதிக்கப்பட்ட குழந்தைகள் மிக நல்ல பலன்களைப் பெறுவதாக அவர்களது பரிசோதனைகள் சொல்கின்றன.
ப்ராணிக் சிகிச்சை நிபுணர் கோ சோக் சூயி (Master Koa Chok Sui) தன்னுடைய Super Brain Yoga என்ற புத்தகத்தில் தோப்புக்கரணத்தைப் பற்றியும் அதன் பலன்கள் பற்றியும் குறிப்பிட்டுள்ளார். தன்னுடைய சொற்பொழிவுகளிலும் இதை அதிகம் குறிப்பிடுகிறார்.
இதனால் தான் தோப்புக்கரணம் பள்ளிகளில் நம் முன்னோர்களால் நடைமுறைப்படுத்தப்பட்டு இருக்கலாம் என்று தோன்றுகிறது. படிக்காத மாணவர்கள் தோப்புக்கரண முறையால் தண்டிக்கப்படுவதன் மூலம் அவர்களது அறிவுத் திறன் அதிகரிக்க வழியும் காண்பிக்கப்பட்டிருக்கிறது என்று தோன்றுகிறது.
இந்த தோப்புக்கரணப்பயிற்சியை தினந்தோறும் மூன்று நிமிடங்கள் செய்தால் போதும் வியக்கத் தக்க அறிவு சார்ந்த மாற்றங்களைக் காணலாம் என்று ஆராய்ச்சியாளர்கள் கருதுகிறார்கள். அவர்கள் பரிந்துரைக்கும் தோப்புக்கரண பயிற்சியை அவர்கள் சொல்கின்ற முறையிலேயே காண்போமா?
உங்கள் கால்களை உங்கள் தோள்களின் அகலத்திற்கு அகட்டி வைத்து நின்று கொள்ளுங்கள். உங்கள் பாதங்கள் நேராக இருக்கட்டும். வலது காதை இடது கையின் பெருவிரலாலும் ஆட்காட்டி விரலாலும் பிடித்துக் கொள்ளுங்கள். அதே போல் இடது காதை வலது கையின் பெருவிரலாலும் ஆட்காட்டி விரலாலும் பிடித்துக் கொள்ளுங்கள். பிடித்துக் கொள்ளும் போது இடது கை உட்புறமாகவும், வலது கை வெளிப்புறமாகவும் இருக்க வேண்டும் என்பது முக்கியம்.
மூச்சை நன்றாக வெளியே விட்டபடி அப்படியே உட்கார்ந்து மூச்சை உள்ளே நன்றாக இழுத்தபடி எழுந்து நில்லுங்கள். மூச்சும், உட்கார்ந்து எழுவதும் ஒரு தாளலயத்துடன் இருக்கட்டும்.
செய்து பழக்கமில்லாதவர்களுக்கு ஆரம்பத்திலேயே மூன்று நிமிடங்கள் தொடர்ந்து தோப்புக்கரணம் செய்வது கடினமாக இருக்கலாம். அப்படிப்பட்டவர்கள் ஒரு நிமிடம் செய்வதில் இருந்து ஆரம்பித்து நாட்கள் செல்லச் செல்ல இரண்டு நிமிடங்கள், பிறகு மூன்று நிமிடங்கள் என்று அதிகரியுங்கள். ஓம்
ஆராய்ச்சியாளர்கள் சொல்லும் மிக நல்ல பலன்களைப் பார்க்கும் போது உங்கள் அறிவுத் திறனின் வளர்ச்சிக்காக மூன்று நிமிடங்கள் தினமும் செலவழிப்பது மிகப்பெரிய விஷயமல்ல அல்லவா?

SARVA VASYA SANKALPAM -TAMIL

SARVA VASYA SANKALPAM -TAMIL

Monday, January 27, 2020

Kayakalpm -Tamil - Explanation

காயகற்பப் பயிற்சி எனும் ஒரு அற்புதமான மனித வளப் பயிற்சி அளிக்கப்படுகிறது. விந்து நாதம் எனும் மூலப்பொருட்களைத் தூய்மை செய்து அவற்றின் வலுவையும் அளவையும். தரத்தையும் உயர்த்தும் எளிய பயிற்சி ஆகும் அது. நாம் உண்ணும் உணவு. 1. ரசம் 2. ரத்தம் 3. சதை 4. கொழுப்பு 5. எலும்பு 5. மஜ்ஜை மற்றும் 6. சுக்கிலம் என்ற ஏழு தாதுக்களாக முறையே ஒன்றிலிருந்து மற்றொன்றாக இறையாற்றலால் மாற்றப்படுகின்றன. இந்த உடலியக்க விஞ்ஞானத்தைப் பற்றி சிந்தனையாளர்களுக்கும் மருத்துவ விஞ்ஞானிகட்கும் நன்கு தெரியும். இவற்றில் சுக்கிலம் (விந்து-நாதம்) எனும் 'சீவ இன அனைத்தடக்கப் பொருள்' தான் மனித உடலினது தோற்றம் தன்மை வளர்ச்சி இயக்கம் விளைவுகள் அனைத்துக்கும் அடிப்படை ஆற்றலான மிக மதிப்புடைய பொருளாகும். உயிரினங்களின் பிறப்பு இறப்பு இரண்டு நிகழ்ச்சிகட்கும் வித்து எனும் சீவசக்தியே காரணம் ஆகும். ஒரு விதையில் ஒரு முழு மரம் காந்த அலைவடிவில் சுருங்கி இருப்பதைப் போலவே விந்துநாதக் குழம்பில் உள்ள ஒவ்வொரு செல்லிலும் மனித வடிவமே சுருங்கி இருக்கிறது. மேலும் பரிணாமத் தொடராக வரும் செயல்கள் எண்ணம் இவற்றின் அலைகளைச் சுருக்கிப் பதிவாக வைத்திருக்கும் கருமையத்ததைத் தாங்கிக் கொண்டு இருக்கும் தெய்வீகத் திரவமும் வித்துவே (Sexual vital fluid) விந்து நாதத் திரவமே ஆகும். இத்தகைய மதிப்பு வாய்ந்த வாழ்க்கை நலநிதியான விந்துநாதத் திரவங்களை மனிதவள மதிப்பறியாமல் மக்களில் பெரும்பாலோர் வீணாக்கியும் கெடுத்தும் விடுகிறார்கள். இந்தக் குறைபாடு மனித வளத்தை மிகவும் தாக்கிச் சீரழிக்கின்றது. இதனால் தான் தனிமனிதன் குடும்பம் சமுதாயம் உலகம் என்ற அளவில் மனித இன வாழ்வில் கணிக்க முடியாத எண்ணிக்கையில் சிக்கல்களையும் துன்பங்களையும் விளைவிக்கின்றன. இந்த உண்மைகளை அறிந்த சித்தர்கள் எனும் மனிதவள விஞ்ஞானிகள் வித்துவைத் தூய்மை செய்து வளப்படுத்தும் பயிற்சியை உலக மக்களுக்கு வழங்கியுள்ளார்கள். இந்தப் பயிற்சி தான் காயகற்பம் எனும் மனித வளப் பயிற்சியாகும். நீண்ட காலமாக இந்தக் காயகற்ப பயிற்சியானது மிகவும் ரகசியமாக வைக்கப்பட்டிருந்தது. எல்லாச் சித்தர்களுமே அவரவர்கள் எழுதிய நூல்களில் இந்தப் பயிற்சியைப் பற்றிச் சில குறிப்புகளை எழுதி உள்ளார்கள். எனினும் இதனைப் பயின்று பயன் பெற்றவர்கள் நேர்முகமாகக் கற்றுக் கொடுத்தால் அல்லாது எவருக்கும் எழுத்தின் மூலம் இந்தப் பயிற்சியினை விளங்கிக் கொள்ளமுடியாது. உதாரணமாக உருத்தரித்த நாடியில் ஒடுங்குகின்ற வாயுவைக் கருத்தினா லிருந்தியே கபாலமேற்ற வல்லீரேல் விருத்தரும் பாலராவார். மேனியும் சிவந்திடும் அருள்தரித்த அம்மைபாதம் ஐயன்பாதம் உண்மையே! காயகற்ப பயிற்சியைப் பற்றி சித்தர்கள் எழுதி உள்ள பாடல்களில் இது ஒன்று. இது சுத்த தமிழ்தான் என்றாலும் இதனைப் படித்து விட்டுக் காயகற்பப் பயிற்சியை ஒருவர் தெரிந்து பழகமுடியாது. எனவே குரு என்னும் ஒரு நபரிடமிருந்து நேர்முறைப் பயிற்சி தான் தேவையாகின்றது. இந்தப் பயிற்சியை மூன்று மணி நேரத்தில் ஒருவர் கற்றுக் கொள்ள முடியும். மனவளக் கலை மன்றங்களில் உறுப்பினராகி வாழ்க்கைவள விஞ்ஞானம் பயில்வேலார்களுக்கு இந்தப் பயிற்சியும் சேர்த்துக் கொடுக்கப்படுகின்றது. முறை தவறிய வழிகளில் விந்துவை நாசப்படுத்தி கொண்டு படிப்பில் விருப்பமில்லாமலும் நினைவாற்றல் குறைந்து வாழ்வில் சோர்வும் ஏமாற்றமும் காண்கின்ற இளைஞர்களுக்கு அவர்கள் வாழ்வைப் புதுப்பித்துக் கொள்ள இது ஒர் உயர்ந்த சாதனைவழி. ஆண் பெண் இருபாலரும் வயது பதினான்கு பதினைந்துக்கு மேல் காயகற்பப் பயிற்சியைக் கற்றுப் பயனடையலாம். திருமணம் வேண்டாம் என்று பொதுநல ஆன்மீகத் தொண்டில் ஈடுபட்டுள்ளவர்களுக்கும் இந்த அரிய காயகற்பக் கலை நல்லதோர் தோழனாகப் பயன்படும். 1. ஆயகலை கள்மொத்தம் கணக்கெடுத்தோர் அறுபத்தி நாலுஎன்றார் அனைத்தும் கற்றும் காயகற்ப மெனும்கலையைக் கற்கா விட்டால் கற்றதெல்லாம் மண்புக்கும் உடல்வி ழுந்தால் மாயமெனும் காந்தம்உயிர் வித்து மூன்றில் மறைந்துள்ள இரகசியங்கள் விளங்கி வாழ்ந்தால் தீயவினை கள்கழிய உலகுக் கென்றும் தெளிவான அருள்ஒளியாய் நிலைக்கும் ஆன்மா 2. கறைபோக்கி வித்ததனை உறையச் செய்யும். காயகற்பப் பயிற்சியினால் உளநோய் நீங்கும் நிறைமனமும் ஈகையோடு பொறுமை கற்பு நேர்நிறையும் மன்னிப்பும் இயல்பாய் ஓங்கும் இறையுணர்வு விழிப்புநிலை அறிவுக் கூர்மை இனியசொல் எண்ணத்தின் உறுதி மேன்மை மறைபொருளாம் மனம் உயிர் மெய் யுணர்வு கிட்டும். மாதவமாய்ப் பிறப்பிறப்புத் தொடர் அறுக்கும்! காயகல்பம் உள்ளிட்ட உடல்பயிற்சிகளை நாள்தோறும் ஒழுங்காகச் செய்துவந்தால் நோயின்றி வாழலாம். உடலில் உள்ள செல்கள் அனைத்திலும் உள்ள துருவ அமைப்பு சீராகும். மரபு வழியாக வந்த நோய்களைக் கூட சில மாதங்களில் போக்கி நலமடையலாம். சுருங்கச் சொன்னால் மனிதகுல வாழ்வில் உள்ள அனைத்துக் குழப்பங்களுக்கும் நீங்கி அமைதியும் நிறைவும் கொண்ட வாழ்வு அமையும். காயகற்பப் பயிற்சி பயன்கள் உடல் நலம் சீரடையும்; ஆஸ்த்மா, சர்க்கரைவியாதி, குடல்புண், மூலம் போன்ற வியாதிகள் படிப்படியாக நீங்கும் / மட்டுப்படும். உடலின் நோய் எதிர்ப்புச் சக்தி பெருகும். முதுமையைத் தள்ளிப்போடவும், முதுமையிலும் இளமை காத்து இனிய வாழ்வு வாழவும் வழி கோலும். பயனுள்ள நீள் ஆயுள் வாழ ஏதுவாகும். மாணவர்ப் பருவத்தில் நினைவுக் கூர்மை, ஓழுக்கம், கடமையுணர்வு ஒங்கும். தம்பதியரிடையே இணக்கமான இனிய உறவு அமையும். மனித வாழ்வில் ஆன்மீக உணர்வு மேலோங்கி வளர உதவும். இப்பயிற்சியை 14 வயதிற்கு மேல் ஆண் / பெண் இரு பாலரும் (எல்லா மதத்தினரும்) கற்று இன்புறலாம்.

Friday, December 13, 2019

ரத்த சொந்தத்தில் திருமணம்

ரத்த சொந்தத்தில் திருமணம் செய்து கொள்வதால் ஏற்படும் சிக்கல்கள் குறித்து, மகளிர் மற்றும் மகப்பேறு டாக்டர் இந்திரா நெடுமாறன்: நம் உருவம், நிறம், பாத அமைப்பு, இதயத் துடிப்பு, நகம் வளர்ச்சி உட்பட, நம் உடலை, 'குரோமோசோம்'கள் தான் முடிவு செய்கின்றன. எப்போது இறப்போம் என்பதையும், இவை தான் தீர்மானிக்கின்றன.நம் உடல், 'செல்'களால் ஆனது. அந்த செல்களின், 'நியூக்கிளியஸ்' உள்ளே இருக்கிறது, குரோமோசோம். மனிதர்கள் ஒவ்வொருவருக்கும், 46 குரோமோசோம்கள் இருக்கும். 23 குரோமோசோம்கள் அப்பாவிடம் இருந்தும், 23 குரோமோசோம்கள் அம்மாவிடம் இருந்தும் வருகின்றன.அதனால் தான், உருவ அமைப்பு, பழக்க வழக்கங்களில் பெற்றோர் போலவே, குழந்தைகளும் உள்ளனர். அது போலத் தான், பெற்றோர் உடல் நலப் பிரச்னைகளும் குழந்தைகளுக்கு வருகின்றன. ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் இடையே, ஒரே மாதிரியான குரோமோசோம்கள் இருக்கும் என்பதால், அத்தகையோருக்கு பிறக்கும் குழந்தைகள், மாற்றுத் திறனாளிகளாக பிறக்க வாய்ப்பு அதிகம். அதே நேரத்தில், நெருங்கிய சொந்தம் இன்றி, வெளியே இருந்து திருமணம் செய்வதால், புது வகையான குரோமோசோம்கள் இருக்கும்; குழந்தைகள், மாற்றுத் திறனாளிகளாக பிறப்பதற்கான வாய்ப்பு குறைவு.தலைமுறை தலைமுறையாக சொந்தத்திலேயே திருமணம் செய்யும் போது, 'ஹீமோபீலியா, தாலசீமியா' போன்ற ரத்தம் சம்பந்தப்பட்ட பிரச்னைகள் வரும். அடிபட்டு ரத்தம் வெளியாகும் போது, மூன்று நிமிடத்தில் ரத்தம் உறைய வேண்டும். சொந்தத்தில் திருமணம் செய்தால், ரத்தம் உறையும் தன்மையில் பிரச்னை ஏற்பட வாய்ப்பு உள்ளது.மேலும், சொந்தத்தில் திருமணம் செய்யும் போது, ஒரே மாதிரியான மரபணுக்கள் தான் இருவருக்கும் இருக்கும். அதனால், மரபணு பிரச்னைகளும் ஏற்பட வாய்ப்பு உள்ளது. சர்க்கரை நோய், புற்று நோய், இதய நோய் போன்றவை, இப்படித் தான் வழி வழியாக வருகின்றன. கண் பார்வை குறைபாடு, தசை நார்கள் பிரச்னை, உயர வளர்ச்சி குறைபாடு, பருவம் அடையாமல் இருப்பது, திருநங்கையாக பிறப்பது எல்லாமே, குரோமோசோம் பிரச்னை தான். அதுபோல, சொந்தத்தில் திருமணம் செய்வதால், 'இன்பார்ன் எரர் மெட்டபாலிசம்' பிரச்னை வர வாய்ப்பு உள்ளது. இந்த பாதிப்புக்கு உள்ளான குழந்தைகளால், தாய்ப்பாலைக் கூட குடிக்க முடியாத பிரச்னை ஏற்படும். எனவே, அத்தை மகள் - மாமன் மகன் திருமணம் செய்யக் கூடாது. அதே நேரத்தில், சொந்தத்தில் திருமணம் செய்தாலும், சிலருக்கு பிரச்னை இல்லாமல், நல்ல குழந்தைகளாக பிறக்கவும் வாய்ப்பு உள்ளது. அதற்கு காரணம், மரபணுக்களில் குறைபாடு இல்லாமல் இருப்பது தான்!

Sunday, October 20, 2019

14 Point Acupressure -Details -SKY yoga

By Vedathiri Maharishi
  -------------------------------------------------
 Explanation of Aku Pressure Training
 ----------------------------------------------

 (14 points Acupressure)

 1. Three pairs of nerves converging

 Helps process orders sent from the brain.

 2. Overlap of the gastrointestinal tract

 It is okay to produce enough liquids to ferment food.

 3. Middle of the gastrointestinal tract

 The digestion is done properly.

 4. The bottom of the gastrointestinal tract

  Stimulates the small intestine.

 5. Benefits of lifting like a hook at the top
 Gastrointestinal tract
 (A) The gallbladder is stimulated and secreted by the gallbladder to balance the acidity of the secretions in the gastrointestinal fluid.

 (B) Adrenal area of ​​pancreas
 Promotes the pancreas and adrenal region and prevents blood pressure and diabetes.

 6. Bladder: Unload the hook down
 Removal of urinary tract.
 Prevention of cervical and menstrual syndrome in women.

 7. Lower Liver
 The gallbladder is promoted as it pulls towards the right shoulder.

 8.The lower part of the spleen

 The lipid is dissolved as it pulls towards the left shoulder.

 9. When the small intestine meets the colon

 Stretches downward to the right thigh (intestine) to prevent appendicitis.

 10. The colon

 Left thigh, downward pulling will keep the stool with enough water.

 11 Liver

 Right side down rib
 Glucose is produced and energized by the body.

 12. Spleen

 Left below the rib
 Vitamins A, B, C, D, E help to produce vitamin.

 13.Transportation (flexion)
 Place the pitcher in the groin.
 Meridian nerves are promoted.
 14  stool  intestine

 Hamstring (left)

 Protects against prostate gland, prostatitis and germina.

Friday, October 4, 2019

What is Uric acid - In Tamil

உடலிலேயே சிறுநீரகம் தான் இரத்தத்தை சுத்தப்படுத்தும் ஒரு உறுப்பு.
எனவே சிறுநீரகத்தை ஆரோக்கியமாக வைத்துக் கொள்வது ஒவ்வொருவரின் கடமை.
சிறுநீரகத்தின் பணிகள்:
நெப்ரான்:
இதுவே சிறுநீரகத்தின் முக்கிய வடிகட்டி. இது இரத்தத்தில் உள்ள வேதியல் பொருட்களில், தேவையுள்ள, தேவையில்லாதவற்றை
பிரித் தெடுக்கிறது.
சிறுநீரகத்தில் இந்த நெப்ரான்கள் பல கோடிகள் உள்ளன.
மால்பிஜியன் குழாயின் மூலம் வடிகட்டி மீண்டும் உறிஞ்சி இரத்தத்துடன் கலக்க வைப்பதும், மீதத்தை சிறுநீர் குழாய் வழியாகவும் வெளியேற்றுகிறது.
சிறுநீரகம் சீராக செயல்படவில்லையென்றால் இரத்தம் அசுத்தமாகும், இரத்த சிவப்பணுக்களின் உற்பத்தி பாதிக்கப்படும்.
தண்ணீர், யூரியா, சோடியம் மற்றும் வேதிப் பொருட்களின் சமநிலை பாதிக்கப்பட்டு, உடலின் அக, புற அமைப்பில் மாற்றங்கள் உண்டாகும்.
இதயத்திலிருந்து வெளியாகும் ரத்தத்தில் 25 சதவீதம் வரை சிறுநீரகம் பெறுகிறது.
அதிலிருந்து உடலுக்குத் தேவையான……
குளுக்கோஸ்,
அமினோ அமிலம்,
வைட்டமின்கள்,
ஹார்மோன்கள்
போன்றவற்றைத் தேக்கிவைத்துக்கொண்டு தேவையற்ற……
யூரியா,
குளோரைடு
போன்ற கழிவுப்பொருள்களைப் பிரித்தெடுத்து வெளியேற்றும் முக்கியமான பணியைச் சிறுநீரகம் செய்கிறது.
★அதேவேளையில்………
சோடியம்,
பொட்டாசியம்
போன்ற தாதுக்கள் அதிகரித்தால் அவற்றையும் சிறுநீரில் வெளியேற்றுகிறது.
உடலில் நீரின் அளவைச் சமநிலையில் வைத்துக்கொள்கிறது.
'ரெனின்' எனும் ஹார்மோனைச் சுரந்து ரத்த அழுத்தத்தைச் சரியாக வைத்துக்கொள்கிறது.
ரத்தச் சிவப்பணுக்களின் உற்பத்திக்குத் தேவைப்படுகின்ற 'எரித்ரோபாய்ட்டின்' எனும் ஹார்மோனைச் சுரக்கிறது.
'வைட்டமின் டி' யைப் பதப்படுத்தி 'கால்சிட்ரியால்'எனும் ஹார்மோனாக மாற்றித் தருகிறது.
இது எலும்புகளின் வளர்ச்சிக்குத் தேவைப்படுகிறது. உணவுச் சத்துகளின் வளர்சிதை மாற்றப் பணிகளுக்கு உதவுகிறது. உடலில் உற்பத்தியாகின்ற நச்சுப்பொருள்களையும் வெளியேற்றுகிறது.
நாம் சாப்பிடுகின்ற மருந்து, மாத்திரைகளில் நச்சுகள் இருந்தால் அவற்றையும் சிறுநீரில் வெளியேற்றுகிறது.
நாம் சில மாத்திரைகளைச் சாப்பிட்டதும் சிறுநீர் மஞ்சளாகப் போவது இதனால்தான்.
தினமும் இரண்டு சிறுநீரகங்களும் சேர்ந்து 150 ,180 லிட்டர் ரத்தத்தைச் சுத்தப்படுத்துகிறது.
நாளொன்றுக்கு சுமார் ஒன்றரை லிட்டர் சிறுநீரை உற்பத்தி செய்கிறது.
சிறுநீரகப் பாதிப்பு இரண்டு வகைப்படும்:
1. உடனடி பாதிப்பு
2. நாட்பட்ட பாதிப்பு.
என்ன பரிசோதனைகள்?
ரத்த யூரியா அளவு.
ரத்த யூரியா நைட்ரஜன் அளவு.
ரத்த கிரியேட்டினின் அளவு.
சோடியம்,
பொட்டாசியம்,
கால்சியம் அளவுகள்.
பரிசோதனை முடிவுகள்:
ரத்த யூரியா அளவு, 20 - 40 மில்லி கிராம்/டெ.சி. லிட்டர் என்று இருக்க வேண்டும்.
இதற்கு மேல் யூரியா அளவு அதிகமானால் சிறுநீரகம் பாதிக்கப்பட்டுள்ளது என்று அர்த்தம்.
ரத்த யூரியா நைட்ரஜன் சரியான அளவு 7 - 20 மி.கி/.டெ.சி. லிட்டர்.
★ரத்தக் கிரியேட்டினின் அளவு
ஆண்களுக்கு 0.7 - 1.4 மி.கி/.டெ.சி. லிட்டர்,
பெண்களுக்கு 0.6 - 1.3 மி.கி./டெ.லி.,
குழந்தைகளுக்கு 0.5 - 1.2 மி.கி./டெ.லி.,
என்று இருக்க வேண்டும். இதற்கு மேல் அளவுகள் அதிகமானால் சிறுநீரகம் பாதிக்கப்
பட்டுள்ளதாகக் கொள்ள
வேண்டும்.
ரத்த யூரியா அளவும் ரத்த யூரியா கிரியேட்டினின் அளவும் பல மடங்கு அதிகம் என்றால், அது உடனடி சிறுநீரகப் பாதிப்பைக் குறிக்கும்.
★சோடியத்தின் அளவு 135 - 142 மில்லிமோல்/லிட்டர்,
★பொட்டாசியத்தின் அளவு 3.5 - 5 மில்லிமோல்/லிட்டர்,
★கால்சியத்தின் அளவு 9 - 11 மி.கி./டெ.லி.
என்று இருக்க வேண்டும்.
சிறுநீரகம் பாதிப்படைவது எப்படி?
★கட்டுப்படாத சர்க்கரை நோய்,
★கட்டுப்பாட்டில் இல்லாத ரத்த அழுத்தம்,
#மற்றும் அதற்க்காக ஆங்கில மருந்து எடுத்தல்…
புகைபிடித்தல்,
மது அருந்துதல்,
சிறுநீரகத் தொற்றுகள்,
சிறுநீரகக் கற்கள்,
உடற்பருமன்,
காசநோய்,
வலி நிவாரணி மாத்திரைகளின் பக்கவிளைவு,
உணவு நச்சுகள்,
புராஸ்டேட் வீக்கம்,
புற்றுநோய்
போன்றவற்றால் சிறுநீரகம் பாதிக்கப்படுகிறது.
இந்தப் பாதிப்புகளை ஆரம்பத்திலேயே கண்டுபிடித்து விட்டால் பிரச்னைகள் குறையும். தவறினால் நாளடைவில் எந்த வேலையும் செய்யமுடியாத அளவுக்குச் சிறுநீரகம் செயலிழந்து விடும்.
உடலில் சுத்தம் குறைவது மற்றும் சுற்றுப்புறச் சுகாதாரக் குறைவால் நோய்க்கிருமிகள் சிறுநீர்ப்பாதையைத் தொற்றும்போது
'*சிறுநீரக அழற்சி*' ஏற்பட்டு குளிர்க்காய்ச்சல் வரும்.
சிறுநீர் செல்லும்போது எரிச்சல் வலி ஏற்படும்.
சிறுநீர் கலங்கலாகப் போகும்.
யார் பரிசோதனை செய்துகொள்ள வேண்டும்
நீரிழிவு நோயாளிகள்.
உயர் ரத்தஅழுத்தம் உள்ளவர்கள்.
பரம்பரைரீதியாகச் சிறுநீரகப் பிரச்சினை உள்ள குடும்பத்தைச் சேர்ந்தவர்கள்.
சிறுநீரகத்தில் கல் உள்ளவர்கள்.
சிறுநீரில் ரத்தம் கலந்து வரும் பிரச்சினை உள்ளவர்கள்.
சிறுநீர் கழிப்பதில் சிக்கல் இருப்பவர்கள்.
அடிக்கடி சிறுநீரகத் தொற்று ஏற்படுகிறவர்கள்.
நீரிழிவு நோயாளிகள் சிறுநீரில் உப்பு அதிகம் போகிறது என்றால் சிறுநீரகத்தை கவனிக்க வேண்டும்.
பெண்களுக்கு கர்ப்பக் காலத்தில் சிறு நீரில் உப்பு அதிகமாக வெளியேறினால் சிறுநீரகத்தை பரிசோதிக்க வேண்டும்.
கண்ணில் புரை (ரெடினோபதி) வளர்ந்தால் சிறு நீரகத்தையும் பரிசோதனை செய்ய வேண்டும்.
கவனிக்கப்படாத சிறுநீர்கர்கல் கூடா சிறுநீரக செயல்யிலப்பு செய்து விடும்.....
 சிறுநீரகக் கல் தொல்லை:
நாம் குடிக்கின்ற தண்ணீரிலும், சாப்பிடும் உணவிலும்………
கால்சியம் பாஸ்பேட்,
ஆக்சலேட்
என்று பல தாது உப்புக்கள் உள்ளன. பொதுவாக உணவு செரிமானமான பிறகு இவை எல்லாமே சிறுநீரில் வெளியேறிவிடும்.
சமயங்களில் இவற்றின் அளவுகள் ரத்தத்தில் அதிகமாகும் போது……
சிறுநீரகம்,
சிறுநீரகக் குழாய்,
சிறுநீர்ப்பை
ஆகிய இடங்களில் இந்த உப்புகள் படிகம்போல் படிந்து கல் போலத் திரளும். ஒரு கடுகு அளவில் ஆரம்பித்து பெரிய நெல்லிக்காய் அளவுக்கு வளர்ந்துவிடும்.
இதுதான் சிறுநீரகக் கல்.
சிறுநீரில் ரத்தம் வரவே கூடாது. அப்படி வந்தால் சிறுநீரகத்தில் கல் இருக்கலாம்.
காசநோய்,
புற்றுநோய்
போன்றவை சிறுநீரகம் மற்றும் சிறுநீர்ப்பையைப் பாதித்திருக்க வாய்ப்புண்டு. ஆகவே சிறுநீரில் ரத்தம் வெளியேறினால் உடனடியாக காரணம் அறிந்து சிகிச்சை மேற்கொள்ள வேண்டும்.
என்ன அறிகுறிகள்?
 சிறுநீரகம்
பாதிக்கப்பட்டால்……
சிறுநீர் பிரிவது குறையும்.
சிறுநீர் சரிவர பிரியாததால்…
மூச்சுத் திணறல்,
அதிக இருமல்,
நெஞ்சுவலி,
சளியில் இரத்தம் வருதல்,
விக்கல்,
பசியின்மை,
இரத்த வாந்தி,
நினைவிழத்தல்,
குழப்பம்,
கை நடுக்கம்,
நரம்பு தளர்ச்சி,
தோல் வறண்டு அரிப்பு ஏற்படுதல்
வாந்தி வரும்.
தூக்கம் குறையும்.
கடுமையான சோர்வு,
உடலில் அரிப்பு,
முகம் மற்றும் கை கால்களில் வீக்கம் தோன்றும்
மூச்சிளைப்பு (மூச்சுவாங்கும்)
போன்ற அறிகுறிகளும் தோன்றும்.
சிறுநீரகப் பாதிப்பை ஆரம்ப நிலையிலேயே கவனித்து விட்டால் நோய்க்கான அடிப்படைக் காரணத்தை அறிந்து மருந்துகள் மூலமே குணப்படுத்தி விடலாம்.
👉டயாலிஸிஸ்..!
சிறுநீரகம் வடிகட்டியை போல செயல்பட்டு சிறுநீரகம் தொடர்ந்து ரத்தத்தை சுத்தப்படுத்துகிறது.
சிறுநீரகம் செயல் இழக்கும்போது ரத்தத்தில் வேதிப்பொருட்கள் சேர ஆரம்பிக்கும். இந்த வேதிப் பொருட்களை செயற்கை முறையில் இயந்திரம் மூலம் ரத்தத்திலிருந்து அகற்றுவதற்கு பெயர்தான் ‘டயாலிஸிஸ்’ இப்போது *ஹுமோ டயாலிஸிஸ்* என்ற கருவி மூலம் ரத்தத்தை சுத்திகரிக்கும் முறையும், *பெரிடோனியல்* டயாலிஸிஸ் என்ற வயிற்றில் இருக்கும் ஜவ்வுப் பகுதியை தண்ணீர் செலுத்தி சுத்தப்படுத்தும் முறையும் நடைமுறையில் இருக்கிறது.
சிறுநீரக செயல் இழப்புக்கு உள்ளானவர் தினசரி டயாலிஸ் செய்து கொள்வதுதான் முறையானது என்று நவீன மருத்துவம் சொல்லுகிறது. ஆனால், அதற்கு செலவு மிகவும் அதிகமாகும். வாரம் 3 தடவை டயாலிஸிஸ் உயிர் வாழத் தேவைப்படும்.
👉அப்படி……
டயாலிஸிஸ் செய்தாலு மரணத்தை தள்ளி போடலாம் தவிர நிறந்தர தீர்வு இல்லை
மரணம் உறுதி…!!!! ????
இரத்த பரிசோதனைகளில்……
Creatinine --- கிரியாட்டினின்
Urea. --- யூரியா
Uric Acid. --- யுரிக் ஆசீட்
போன்ற உப்பு சத்துகள் கூடிவிட்டால்……
சிறுநீரகப் பாதிப்பு இருப்பது உறுதி……
நவீன மருத்துவத்தின் மூலம் பழுதடைந்த கிட்னியை டயாலிசிஸ் என்ற பெயரில்
நவின கருவிகளின் மூலம்
உடலில் உள்ள ரத்தத்தை சுத்தம் செய்து மாற்றுவார்கள்.
டயாலிஸிஸ் செய்தாலு மரணத்தை தள்ளி போடலாம் தவிர நிறந்தர தீர்வு இல்லை மரணம் உறுதி…!!!! ????
வாரம் 2 அல்லது 3 தடவை பண்ணனும்...
அதுவும் ஆயுள் முழுவதும்………
அப்படியே ஆயுள் முடிந்துவிடும்………
சிறுநீரகம் ஏன் நம் உடலுக்கு தேவை?
உங்கள் சிறுநீரகம் என்பது , இரண்டு சிறுநீரகங்களையும் சேர்த்து, உங்களின் உடலின் எடையில் 0.5% மட்டுமே..
ஆனால் சிறுநீரகங்களின் பணிஎன்பது எண்ணிலடங்காதது.
ஒரு நாளில் ஒரு நொடி கூட பணிசெய்ய சிறுநீரகம் மறப்பதில்லை.
மறந்தால் நீங்க பரலோகம்தான்.
ஒவ்வொரு சிறுநீரகத்திலும் சுமார் 1,000,000 நெப்ரான் என்ற சிறுநீர் வடிகட்டிகள் உள்ளன.
ஒரு நெப்ரான் சுமார் 30–55 மி.மீ நீளமுள்ளது.
நெப்ரான்களின் மொத்த நீளம் 160 கி.மீ
ஒவ்வொரு நாளும் 190 லிட்டர் இரத்தத்தை வடிகட்டுகிறது.
இதயம் துடித்து வெளியேற்றும் இரத்தத்தில் 25% சிறுநீரகத்திற்கு செல்கிறது.
உடலின் இரத்தம் முழுவதும், ஒரு மணி நேரத்திற்கு 12 தடவையில் சென்று சுற்றி வருகிறது. .
ஒவ்வொரு நாளும் சுமார் 200 லிட்டர் இரத்தத்தை சிறுநீரகம் வடிகட்டி சுத்தம் செய்கிறது.
ஒவ்வொரு சிறுநீரகமும் தான் 80% செயலிழப்பு வரை பணிசெய்யும்.
பொதுவாக சிறுநீரகம் ஒரு நாளில் சுமார் 2 லிட்டர் சிறுநீரை உற்பத்தி செய்கிறது.
இது நடக்காவிட்டால் உடலுக்கு ஆபத்துதான்
சிறுநீரகம் உடலிலுள்ள நச்சுப பொருட்கள் , அதிகமான உப்பு மற்றும் யூரியாவை வெளியேற்றுகிறது.
உடலின் தாது உப்புகள் மற்றும் நீரின் அளவை சமனப்படுத்துகிறது.
உடலின் செயல்பாட்டுக்கு ஒரு சிறுநீரகமே போதும்.
நவீன மருத்துவத்தில் மூலம்……
சிறுநீரகம் செயலிழந்தவர்களுக்கு அவர்களின் உடலில் உள்ள தேவையற்ற கழிவுகளை
*ஹீமோடயாலிசிஸ் மெஷின்* மூலம் வெளியேற்றப்படுகிறது.
👉சிறுநீரகம் செயலிழந்துவிட்டால்……
ஆங்கில மாத்திரை,
மருந்துகளின் மூலம்
சரிசெய்ய முடியாது.
சிறுநீரகங்கள் பாதிக்கப்பட்டவர்களின் ரத்தத்தை மெஷினுக்குள் செலுத்தினால் அது, தேவையற்ற கழிவுகளை நீக்கி நல்ல ரத்தத்தை உடலுக்குள் செலுத்தும்.
*டயாலிஸிஸ் செய்தாலு…*
மரணத்தை தள்ளி போடலாம் தவிர நிறந்தர தீர்வு இல்லை
மரணம் உறுதி…!!!! ????*
வாரம் 2 அல்லது 3 தடவை பண்ணனும்...
அதுவும் ஆயுள் முழுவதும்..
அப்படியே ஆயுள் முடிந்துவிடும்………
*நாட்டு மருந்துக்*……… கடைகளில் விற்கும் பொருட்களை வைத்தே கிட்னி பிரச்னையை சரி செய்யலாம் ஆரம்ப நிலையில் மட்டும்.
வாழ்வா சாவா என்ற போராட்டத்தில் இருக்கக் கூடியவர்களுக்கு மிக சிறந்த மருந்து.
செலவில்லாமல் சிரமமும் இல்லாமல் கிட்னி பழுதிலிருந்து எவ்வாறு மீள்வது?…
Creatinine --- கிரியாட்டினின்
Urea. --- யூரியா
Uric Acid. --- யுரிக் ஆசீட்
உப்பு சத்து கூடிவிட்டது
கை, கால், முகம் வீக்கம்……
இரண்டே வாரத்தில் சரி செய்யும் அற்புத மருந்து..!
டயாலிஸிஸ் செய்தாலு மரணத்தை தள்ளி போடலாம் தவிர நிறந்தர தீர்வு இல்லை மரணம் உறுதி…!!!! ????
வாரம் 2 அல்லது 3 தடவை பண்ணனும்...
அதுவும் ஆயுள் முழுவதும்..
அப்படியே ஆயுள் முடிந்துவிடும்……
என்ன தலை சுத்ததுதா…?!
சரி வராம தடுக்க சில விஷயங்களை சொல்கிறேன்...?
வந்தாலும் சரி செய்ய வழி சொல்லுகிறேன்…?
நவீன காலங்களில் கிட்னி பழுதடைந்துவிட்டால் டயாலிசிஸ் என்ற பெயரில் உடலில் உள்ள ரத்தத்தை சுத்தம் செய்து மாற்றுகிறார்கள்.
createnine level 0.6 முதல் 1.3 வரை இருக்க வேண்டியது அவசியம். அப்படி இல்லை என்றால் அதைத்தான் கிட்னி வேலை செய்யவில்லை, கிட்னி பழுதடைந்து
விட்டது என்று கூறுகிறோம்.
அது போன்ற சூழலில் கிட்னியை மாற்ற வேண்டும் என்று கூறுவார்கள். அதற்கு லட்சக்கணக்கில் செலவாகும்.
இது நடுத்தர மக்களுக்கு பாரமாக இருக்கும்.
அதேசமயம் வலியாலும் அவதிப்பட வேண்டியிருக்கும்.